உள்ளூர் திட்டக்குழு அங்கீகாரம் பெறப் பட்டுள்ளது. வீட்டுமனை லே அவுட்டில் 26 செண்ட் பூங்கா, 30 அடி சாலை மற்றும் 23 அடி சாலைக்கு வகை செய்யப்பட்டு வீர கேரளம் பேரூராட்சி வசம் 2008இல் ஒப்படைக் கப்பட்டது.
நாகராஜபுரம் தலித் மக்கள் குடியிருப்புப் பகுதியில் லே அவுட் ரியல் எஸ்டேட் உரிமை யாளர்கள் 400 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி விட்டனர். இதற்கு எந்த அனுமதியும் பெறப்பட வில்லை. இந்தச் சுவர் 1000 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்டதாகும். லே அவுட் வீட்டுமனைகள் அருகில் தலித் மற்றும் நரிக்குற வர் குடியிருப்புகள் இருப்பதால் நிலங்களை கூடுதலான விலைக்கு விற்க முடியாது என்பதால் இந்த நீளமான சுவரை அங்கு கட்டிவிட்டனர்.
தலித் மக்களின் பொதுப் பாதையை மறித்து சுவர் எழுப்பிய பிரச்சனையை கோவை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம் கொண்டு சென்றார் இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி இரு வட்டாட்சியர்கள் மற்றும் வீரகேரளம் செயல் அலுவலரும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் அந்தச் சுவர் சட்ட விரோதமான சுவர் என கண்டறியப்பட்டது. எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அந்தச் சுவர் இரண்டு இடங்களில் இடித்து அகற்றப்பட்டது. லே அவுட்டில் உள்ள 30 அடி சாலை, 23 அடி சாலை இணையும் இரு இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுவரின் பகுதிகள் இடித்து அப்புறப்படுத்தப் பட்டன. இதனால், இரு பாதைகளின் வழியாக வும் தலித் மக்கள் தொண்டாமுத்தூர் சாலைக்கு சென்று வர வழி ஏற்பட்டது.
இவ்வாறு சுவரின் இரு பகுதிகள் அகற்றப் பட்டு பொதுப் பாதைகளுக்கான உரிமை கிடைத்ததும் தலித் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு தெரிவித் தனர்.
உத்தபுரம் தீண்டாமைச் சுவர் தகர்ப்பை தொடர்ந்து கோவை மாவட்டம் மட்டுமல்ல, வேறு பல மாவட்டங்களிலும் சாதிச் சுவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்து சிபிஐ(எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலை யிட்டு அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை கள் மேற்கொண்டன. இதில் நீலகிரி மாவட்ட தலையீடு குறிப்பிடத்தக்கதாகும். நீலகிரி மாவட்ட மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தலித் மக்களும், பழங்குடியினரும் ஆவர். இவர்களில் மிகக் கணிசமானவர்கள் (99 சதவீதம்) தோட்டக் காடுகளில் வேலை செய்யக்கூடியவர்கள்.
இம்மாவட்டத்தில் பெரும் தேயிலைத் தோட்டங்கள் பல உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களின் உள்பகுதி சாலைகளில் பல தடுப்பு கேட்டுகள் அமைக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்களின் பாதை பயன்பாடு தடுக்கப்படும் நிலை இன்றளவும் தொடர் கிறது. தோட்டங்களிலிருந்து தங்கள் குடி யிருப்புப் பகுதிக்கு வாகனங்களில் செல்ல வேண்டுமெனில் இவர்கள் முன் அனுமதி பெற வேண்டும். பெறவில்லையெனில் செல்ல முடியாது. அரசு அமைத்த சாலை களில் கூட தனியார் நிறுவனங்கள் தடுப்பு கேட் அமைத்து மக்களை தடுத்து வரும் அவல நிலை உள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் இந்நிலைமை குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் பல கள ஆய்வுகளை நடத்தியுள்ளன. ஆய்வில் வெளிவந்த உண்மைகளின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் பாதை அடைப் கப்பட்டிருந்த சில பகுதிகளை தேர்வு செய்து இந்த அமைப்புகள் சார்பாக போராட்டங் களுக்கு திட்டமிடப்பட்டன. இப்போராட்டம் கணிசமான தொழிலாளர்களின் பங்கேற் போடு எழுச்சியாக நடத்தப்பட்டது. மூப்பர்காடு, கொடநாடு எஸ்டேட் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பழங்குடி மற்றும் தலித் மக்களை வழிமறித்து அமைக்கப்பட்டி ருந்த கேட்டை அகற்றும் போராட்டம் வெற்றி பெற்றன. நாம் நடத்திய வலுவான போராட்டத்தால் அந்த இரு கேட்டுகளும் இடித்து அகற்றப்பட்டது. பழங்குடி, தலித் மக்களின் பாதை உறுதி செய்யப்பட்டது.
இதேபோல, கொடநாடு எஸ்டேட் நிர்வா கம் அருகில் உள்ள அண்ணா நகர் எனும் தலித் காலனிக்கு செல்லும் பாதையை மறித்து கேட் அமைத்திருந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டத்தால் அந்த கேட்டும் அப்புறப்படுத்தப்பட்டு தலித் மக்களின் பாதை உறுதி செய்யப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி சிரிமாவோ பண்டார நாயக ஒப்பந்தத்தின் விளைவாக தாயகம் திரும்பிய பல நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள். தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டு தாயகம் திரும்பிய தலித் மக்களுக்கு வேலை வழங்கப்பட்டது. பகாசூரன் மலைப்பகுதியில் மேற்படி தலித் மக்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டன. ஆனால், இம்மக்களுக்கு சாலை வசதி இல்லாமல் பெரும் துயரங்களை எதிர்கொண் டனர். இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) நடத்திய காத்தி ருப்புப் போராட்டம் காரணமாக - அதிகாரி களே சம்பவ இடத்திற்கு வந்து எழுத்துப்பூர்வ மான ஒப்பந்தம் செய்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இம்மக்களுக்கு சாலை வசதியும் செய்து தரப்பட்டது.
தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வாழ் நிலை மிகவும் துயரமானதாகும். இம்மக்களின் வாழ்நிலை குறித்து 1872 குடும்பங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் ஆய்வு செய்யப்பட்டது. இவர்களின் வீடுகள் பெரும்பாலும் மலைச் சரிவில் இருந்தன. இக்குடும்பங்களில் ஒரே ஒருவர் மட்டுமே அரசு ஊழியராக அதுவும் கடைநிலை ஊழிய ராக இருந்தார். சுய தொழில் தொடங்கவும் கடன்கள் கிடைப்பதில்லை. மிகப்பெருவாரி யான வீடுகளுக்கு பட்டாவோ, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளோ கிடைப்பதில்லை. இதர சமூக மக்களுடன் ஒப்பிடும்போது இவர்களுக்கு இரட்டை வாழ்விடம் - இரட்டை வாழ்நிலை எனும் சூழல் இருப்பதை உணர முடிந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய வலுவான போராட்டங்களுக்கு பிறகு தலித் மக்கள் - பழங்குடியினர், தாயகம் திரும்பிய மக்கள் ஆகியோர் வசிக்கும் பகுதிகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங் கள், காடுகள் என வெளிப்புறத் தோற்றத்தில் கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரியும் நீலகிரி மாவட்டத்தில் தலித் - பழங்குடி - தாயகம் திரும்பிய மக்கள் அனுபவித்து வரும் பெரும் துயரங்கள் பெரும்பாலும் வெளியில் தெரிய வில்லை. இவர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டங்களை சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் இது தொடரும்.